» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி: வேதாந்தா நிறுவனம் வரவேற்பு
வெள்ளி 2, ஜூன் 2023 5:54:02 PM (IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை தொடங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு வேதாந்தா நிறுவனம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவன செய்தித் தொடர்பாளர் கிறிஸ்ட் ஜெரால்ட் வெளியிட்ட அறிக்கையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலையில் சில பராமரிப்பு பணிகளை தொடங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்துக் காெள்கிறோம்.
இதன் மூலம், உள்ளூர் ஒப்பந்ததாரர்களை ஈடுபடுத்தவும், தூத்துக்குடியைச் சேர்ந்த சிலருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் வாய்ப்பு கிடைக்கும். தூத்துக்குடி மற்றும் இந்திய மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்ய உரிய ஆதரவும் முடிவும் எடுக்கப்படும் என்று அரசுக்கு நாங்கள் நன்றி கூறுவதுடன் நீதித்துறை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9025658320Jun 3, 2023 - 05:25:50 PM | Posted IP 172.7*****