» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கீரை வியாபாரி மரணத்தை மூடி மறைக்கும் அதிகாரிகள்: சமூக ஆர்வலர் கண்டனம்!
சனி 3, ஜூன் 2023 8:34:37 PM (IST)
தூத்துக்குடியில் மாநகராட்சியின் அலட்சியத்தால் உயிரிழந்த கீரை வியாபாரியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி நிர்வாகத்தால் அந்த சிலைக்காக அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அந்த இரும்பு வேலி முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. ஆனால் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் அந்த உயிரிழப்பு வெளியே தெரியாதவாறு மூடி மறைத்துள்ளனர். கள்ளச்சாராயத்தை குடித்து உயிர் இழந்தவர்களகளுக்கு 10 லட்சம் வழங்கிய தமிழக அரசு தன் குடும்ப வாழ்வாதாரத்தைக் காக்க சாலையோரத்தில் வியாபாரம் செய்த ஏழை கீரை வியாபாரி ஜெய்கணேஷ் குடும்பத்தை காத்திட என்ன செய்ய போகின்றது?
மாநகராட்சியின் அலட்சியப் போக்கால் தனது கணவரை இழந்த மனைவி, தந்தையை இழந்த அப்பாவி குழந்தைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் என்ன செய்யபோகின்றது? வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அக்குடும்பத்தை காத்திட மாவட்ட நிர்வாகமும்,மாநகராட்சி நிர்வாகமும் என்ன செய்யபோகின்றது?
அலட்சியமாக செயல்பட்டு அப்பாவி கீரை வியாபாரியின் உயிரிழப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது? மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக அப்பாவி கீரை வியாபாரி ஜெய்கணேஷ் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீட்டுத்தொகையும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் பெற்றுத்தர ஆவண செய்ய வேண்டும் என்று தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் (NPRF) சார்பாக கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)
