» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காதல் பிரச்சனையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

ஞாயிறு 4, ஜூன் 2023 12:06:25 PM (IST)

குரும்பூர் அருகே காதல் பிரச்சனையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகில் உள்ள கானம் கிராமம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வன்னியராஜ் மகன் பொன் ராதாகிருஷ்ணன் (24), இவர் தனது உறவுக்கார பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தாராம். அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி அவரது பெற்றோரிடம் கூறினாராம். 

அதற்கு அவரது பெற்றோர்கள் இன்னும் 2 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து தருகிறோம் என்று கூறினராம். இதனால் மனவேதனை அடைந்த பொன் ராதாகிருஷ்ணன் நேற்று தனது வீட்டில் விஷம் மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து குரும்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து

saavuJun 4, 2023 - 08:35:01 PM | Posted IP 162.1*****

seththa payale

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory