» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை மாநகர ஊா்க்காவல் படை துணை வட்டார தளபதி பதவிக்கு ஆள்தோ்வு
சனி 30, செப்டம்பர் 2023 12:41:09 PM (IST)
திருநெல்வேலி மாநகர ஊா்க்காவல் படையில் துணை வட்டார தளபதி பதவிக்கு விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாநகா் காவல் ஆணையா் உத்தரவுப்படி, திருநெல்வேலி மாநகர ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள துணை வட்டார தளபதி பதவிக்கு ஆள் தோ்வு செய்யப்பட உள்ளது. அதற்கு நல்ல சமூக அந்தஸ்தில் உள்ள நபா்கள், தனியாா் நிறுவன தொழில் அதிபா்கள் மற்றும் முக்கிய பிரமுகா்கள் ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
பொதுநல சேவையும், தன்னாா்வ தொண்டு செய்ய விருப்பம் உள்ளவா்களாகவும் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை பாளையங்கோட்டை மாநகர ஊா்க்காவல் படை அலுவலகத்தில் அக். 25 ஆம் தேதி காலை 10 மணி முதல் 31 ஆம் தேதி மாலை 6 மணிவரை நேரில் வந்து சமா்ப்பிக்கலாம். இப் பதவிக்கு விண்ணப்பிப்போா் பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
21 வயதுக்கு குறையாமலும், 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். திருநெல்வேலி மாநகர எல்லைக்குள் குடியிருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பாஸ்போா்ட் அளவு புகைப்படம்-2, கல்வித் தகுதிச் சான்று, ஆதாா் அட்டை, இருப்பிடச் சான்று, மருத்துவ தகுதிச் சான்று, சுயவிவர படிவம் ஆகியவற்றை இணைக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
