» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நிர்மலா தேவி வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
வியாழன் 12, ஜூலை 2018 3:40:23 PM (IST)
பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை செப்டம்பர் மாதத்தில் இருந்து 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பேராசிரியை நிர்மலா தேவியையும், அவர் தன்னை செல்போனில் பேசத் தூண்டியதாக சுட்டிக்காட்டிய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரையும் கைது செய்தனர். மூவரையும் போலீஸ் காவலில் எடுத்தும் விசாரித்தனர். நிர்மலாதேவி சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் கூடுதலாக எந்த தகவலையும் சொல்லவில்லை என்றும், செல்போனில் பேசும்போது கூறிய உயர் அதிகாரிகள் யார்? என சொல்ல மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
பேராசிரியர்கள் முருகன் மற்றும் கருப்பசாமியிடம் விசாரித்தும் தொடர்புடைய உயர் அதிகாரிகள் யார்? என்ற முடிச்சு அவிழ்க்கப்படாமலேயே உள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசாரை பொறுத்தமட்டில் இதுவரை அவர்கள் நடத்தியுள்ள விசாரணையின் அடிப்படையில் கைதான 3 பேர் தொடர்பான ஆவணங்களை தயாரிக்கும் பணியிலேயே ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தகட்ட நடவடிக்கைக்கு நகர்வதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை என்றே கூறப்படுகிறது. இந்நிலையில், நிர்மலாதேவி தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆறாவது முறையாக மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிர்மலா தேவி மீதான வழக்கை செப்டம்பர் 24-ஆம் தேதியில் இருந்து 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்யவும், முதல்கட்ட குற்றபத்திரிகையை வரும் 16-ஆம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும் வழக்கில் தொடர்புடைய ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலில் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார் ராமதாஸ் : கே.எஸ்.அழகிரி
சனி 23, பிப்ரவரி 2019 6:23:33 PM (IST)

திமுக சார்பில் போட்டியிட 25ம் தேதி முதல் விருப்பமனு விநியோகம்: அன்பழகன் அறிவிப்பு
சனி 23, பிப்ரவரி 2019 5:30:08 PM (IST)

அதிமுக எம்பி ராஜேந்திரன் மறைவு : முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் நேரில் அஞ்சலி
சனி 23, பிப்ரவரி 2019 3:37:02 PM (IST)

முகிலனை வெளிக்கொண்டுவர காவல்துறை துரித நடவடிக்கை : கனிமொழி எம்பி வலியுறுத்தல்!!
சனி 23, பிப்ரவரி 2019 3:35:07 PM (IST)

தீய சக்திகளின் கோரப்பிடியிலிருந்து தமிழத்தை காக்கும் சக்தி அமமுக: டி.டி.வி. தினகரன் அறிக்கை
சனி 23, பிப்ரவரி 2019 12:52:43 PM (IST)

சென்டர் மீடியனில் கார் மோதி விபத்து : விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி.ராஜேந்திரன் மரணம்
சனி 23, பிப்ரவரி 2019 11:52:32 AM (IST)
