» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காங். தலைவர் பதவியிலிருந்து கேஎஸ் அழகிரி நீக்கப்படுவார்: கராத்தே தியாகராஜன் பேட்டி
செவ்வாய் 16, ஜூலை 2019 11:07:01 AM (IST)
"தமிழக காங்கிரஸ் தலைவராக கே எஸ் அழகிரி வகிக்கும் பதவிக்கு நான் விரைவில் வருவேன்" என கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தியே தொடர வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு சுயமரியாதை வேண்டும். தன்மானம் வேண்டும் என்ற கருத்தோடு வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் கண்ணியமான கூட்டணி அமைய வேண்டும். காங்கிரசிற்கு காலம் காலமாக உழைக்கும் தொண்டர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் கராத்தே தியாகராஜன் பேசியதற்கு கட்சி விரோத நடவடிக்கையாக அவர் மீது தமிழக காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக காங்கிரஸ் தலைமையின் தவறான தகவலின் பேரில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை டெல்லி காங்கிரஸ் மேலிடம் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என கராத்தே தியாகராஜன் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடியாக திருச்சியில் அதிமுக அரசை கண்டித்து திமுக சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே. என். நேரு பேசுகையில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை நாட்கள்தான் பல்லக்கு தூக்குவது, திமுகவும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்றார். பதிலுக்கு பதில் கூறப்பட்ட கருத்தாக இருந்தாலும் இது கூட்டணிக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தென் சென்னை மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து கராத்தே தியாகராஜன் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் பள்ளி மாணவர்கள் விடுப்பு எடுத்தால் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் : தமிழக அரசு திட்டம்
சனி 14, டிசம்பர் 2019 5:31:20 PM (IST)

பாட்டியை கொன்றுவிட்டு பேத்தியை கடத்த முயற்சி: ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்
சனி 14, டிசம்பர் 2019 5:24:00 PM (IST)

உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் மரண அடி வாங்கியது அதிமுகதான் : அமைச்சருக்கு ஸ்டாலின் பதிலடி!!
சனி 14, டிசம்பர் 2019 3:43:50 PM (IST)

நகைக்கடை அதிபர் வீட்டில் 1 கிலோ தங்கம், வைரம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை
சனி 14, டிசம்பர் 2019 12:43:09 PM (IST)

7பேர் விடுதலையில் முடிவெடுக்காத ஆளுநரை நீக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!
சனி 14, டிசம்பர் 2019 12:22:51 PM (IST)

ஸ்டெர்லைட் வழக்கு: 16ம் தேதி முதல் விசாரணை தொடக்கம் - உயர்நீதிமன்றம் அறிவிப்பு
சனி 14, டிசம்பர் 2019 11:55:57 AM (IST)
