» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கல்லூரி முன் மாணவி தீக்குளித்து தற்கொலை: காதல் தோல்வியால் விபரீதம்
செவ்வாய் 19, நவம்பர் 2019 5:44:35 PM (IST)
கோவையில் காதல் தோல்வியால் கல்லூரி முன்பு நடுரோட்டில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சினேகா (19). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். சினேகா கல்லூரி விடுதியில் தங்கி உள்ளார். இவர் சொந்த ஊர் சென்று விட்டு இன்று அதிகாலை விடுதிக்கு திரும்பினார். இந்நிலையில் இன்று காலை 5.45 மணி அளவில் மாணவி சினேகா கல்லூரி விடுதி அருகே நடுரோட்டில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி இன்று மதியம் இறந்தார். இதுகுறித்து பீளமேடு போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி சினேகா ஒருவரை காதலித்து வந்ததாகவும், அந்த காதல் தோல்வியில் முடிந்ததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னையில் பாத்ரூம் என நினைத்து மாடியில் இருந்து குதித்தவர் உயிரிழப்பு
வியாழன் 12, டிசம்பர் 2019 7:59:21 PM (IST)

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் கருணாஸ் சந்திப்பு: உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு
வியாழன் 12, டிசம்பர் 2019 5:35:41 PM (IST)

குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த வாலிபர் திருச்சியில் கைது: இந்தியாவிலேயே முதன்முறை!!
வியாழன் 12, டிசம்பர் 2019 5:14:39 PM (IST)

எகிப்து வெங்காயத்தை முதல்வரே பரிசோதனை செய்துள்ளார்: அமைச்சர் செல்லூர் ராஜு
வியாழன் 12, டிசம்பர் 2019 4:41:59 PM (IST)

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
வியாழன் 12, டிசம்பர் 2019 4:15:08 PM (IST)

ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம்: தட்டிக்கேட்ட இளைஞர் கொலை - விருதுநகரில் பரபரப்பு!!
வியாழன் 12, டிசம்பர் 2019 4:02:23 PM (IST)
