» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்து 6பேர் உயிரிழப்பு: தமிழக முதல்வர் இரங்கல், நிவாரணம் அறிவிப்பு
புதன் 1, ஜூலை 2020 4:24:31 PM (IST)

நெய்வேலி என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யின் 2-ம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 17 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நெய்வேலி என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ, 1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கொதிகலன் வெடித்த விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய சம்பவம்: நடிகர் விஜய் சேதுபதி வருத்தம் தெரிவித்தார்
சனி 16, ஜனவரி 2021 4:59:34 PM (IST)

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சிறந்த வீரர்கள், காளைகளுக்கும் முதல்வர், துணை முதல்வர் பரிசு!
சனி 16, ஜனவரி 2021 4:53:19 PM (IST)

மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம் சார்பில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு அன்னதானம்
சனி 16, ஜனவரி 2021 1:31:15 PM (IST)

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சனி 16, ஜனவரி 2021 12:37:58 PM (IST)

குமரியில் தொடர் மழை: திற்பரப்பில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
சனி 16, ஜனவரி 2021 9:12:23 AM (IST)

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
வெள்ளி 15, ஜனவரி 2021 7:17:08 PM (IST)
