» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் இரவு 10 மணி வரை கடைகள் திறக்க அனுமதி : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
புதன் 21, அக்டோபர் 2020 4:08:54 PM (IST)
காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், உணவங்கள் மற்றும் தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் இரவு 10:00 மணி வரை இயங்கலாம் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோடு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாக உள்ளது.மேலும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிர் இழப்பும் குறைவாக இருந்து வருகிறது.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தினை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மேலும் மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய்த் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் முழுக் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், உணவங்கள் மற்றும் தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் 22.10.2020 முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகின்றன.
அம்மாவின் அரசு எடுத்து வரும் சீரிய நடவடிக்கைகளாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பாலும், நோய்த் தொற்றின் பரவல் தொடர்ந்து குறைந்து வரும் இந்த சூழ்நிலை நீடிக்க எதிர்வரும் பண்டிகை காலங்களில், நோய்த் தொற்று அதிகரிக்காமல் தடுக்க கடைகள், பொது இடங்களில் அதிகம் கூடுவதை தவிர்க்கவும்; முகக்கவசம் அணிவதையும், குறைந்தது 6 அடி இடைவெளி கடைப்பிடிப்பதையும், அடிக்கடி சோப்பின் மூலம் கைகளை கழுவுவதையும், பொதுமக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: தேர்தல் ஆணையம் தலையிட ஸ்டாலின் கோரிக்கை!
வெள்ளி 5, மார்ச் 2021 5:42:44 PM (IST)

அதிமுக முதல் வேட்பாளர் பட்டியல் : எடப்பாடியில் முதல்வர், போடியில் துணை முதல்வர் போட்டி
வெள்ளி 5, மார்ச் 2021 5:27:36 PM (IST)

ரிஷப் பந்த், வாஷிங்டன் அபாரம்: முன்னிலை பெற்றது இந்திய அணி
வெள்ளி 5, மார்ச் 2021 5:22:13 PM (IST)

குமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விஜய் வசந்த் விருப்பமனு!
வெள்ளி 5, மார்ச் 2021 4:58:06 PM (IST)

அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு: ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சண்முகநாதன் போட்டி!!
வெள்ளி 5, மார்ச் 2021 4:00:34 PM (IST)

சிறுமிகளை ஏமாற்றி திருமணம் : போக்சோ சட்டத்தில் கானா பாடகர் கைது
வெள்ளி 5, மார்ச் 2021 11:56:27 AM (IST)
