» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
வெள்ளி 20, நவம்பர் 2020 12:31:05 PM (IST)
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் நடக்கும் கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 67 அடி தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனை நடந்தது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக குறைந்த அளவு பக்தர்களே கலந்து கொண்டனர்.
கார்த்திதை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 29-ந் தேதி (10-ம் நாள் விழா) அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மதியம் சுப்ரமணியர் பிரம்ம தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம், அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பின்னர் இரவு பஞ்ச மூர்த்திகள் உற்சவ உலாவும் நடைபெற உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் கரோனா 2-வது அலை கைமீறிச் சென்று விட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!
வியாழன் 15, ஏப்ரல் 2021 12:42:53 PM (IST)

தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 10 நாளில் கரோனா தடுப்பூசி: தமிழக அரசு உத்தரவு
வியாழன் 15, ஏப்ரல் 2021 11:47:28 AM (IST)

நாகர்கோவிலில் வசந்த் அன் கோ புதிய கிளை திறப்பு விழா
வியாழன் 15, ஏப்ரல் 2021 10:44:50 AM (IST)

தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கரோனா: துரைமுருகன் குணமடைந்து வீடு திரும்பினார்
வியாழன் 15, ஏப்ரல் 2021 9:06:27 AM (IST)

தென்னிந்திய திருச்சபை: திருநெல்வேலி திருமண்டல நிர்வாகிகள் தேர்வு
வியாழன் 15, ஏப்ரல் 2021 8:40:02 AM (IST)

பெரியார் சாலை பெயர் மாற்றிட காபந்து அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது? ஸ்டாலின் கேள்வி
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 5:52:36 PM (IST)
