» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புதுவை ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர், அமைச்சர் தர்ணா போராட்டம்
செவ்வாய் 19, ஜனவரி 2021 4:06:08 PM (IST)
புதுவை ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர் வே.நாராயணசாமி, சமூக நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏறப்ட்டது.
துணைநிலை ஆளுநரை, 15 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக சந்திக்க அனுமதி கோரி சட்டப்பேரவை வளாகத்தில் கடந்த 10 நாள்களாக சமூக நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். கடந்த 10 நாள்களாக போராடியும் ஆளுநர் கிரண்பேடி கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் திடீரென ஆளுநர் மாளிகை முன்பு அமைச்சர் கந்தசாமி இன்று தர்ணாவில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக முதல்வர் நாராயணசாமியும் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் புதுவை மக்களவை உறுப்பினர் வெ.வைத்திலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான் ஆகியோரும் உள்ளனர். ஆளுநர் மாளிகையை சுற்றி 13 நாள்களாக மூன்று அடுக்கு துணை ராணுவப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை, கோவை உள்பட 6 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறையவில்லை: சுகாதாரத் துறை செயலா்
வியாழன் 4, மார்ச் 2021 5:25:57 PM (IST)

தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
வியாழன் 4, மார்ச் 2021 5:13:27 PM (IST)

அய்யா வைகுண்டசாமி 189-வது அவதார தின விழா ஊர்வலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
வியாழன் 4, மார்ச் 2021 4:52:26 PM (IST)

சசிகலா அரசியலில் இருந்து விலகியதால் பாஜகவிற்கு மகிழ்ச்சி : கோவையில் சீதாராம்யெச்சூரி பேட்டி
வியாழன் 4, மார்ச் 2021 3:49:14 PM (IST)

தினமலர் முன்னாள் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி மறைவு: ஸ்டாலின் அஞ்சலி - பொன்னார் இரங்கல்!
வியாழன் 4, மார்ச் 2021 3:35:33 PM (IST)

திமுக கூட்டணியில் வி.சி.க.விற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்தானது
வியாழன் 4, மார்ச் 2021 3:25:58 PM (IST)
