» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஏழை மக்களுக்கு புதிய காப்பீடு திட்டம் அறிமுகம்: பட்ஜெட் உரையில் ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு
செவ்வாய் 23, பிப்ரவரி 2021 3:31:06 PM (IST)
தமிழக இடைக்கால பட்ஜெட்டில் தமிழகத்தில் வாழும் ஏழைக் குடும்பங்களுக்கு அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக இடைக்கால பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.அதில், எல்ஐசி மற்றும் யுனைடட் காப்பீடு இந்தியா திட்டத்துடன் இணைந்து ஏழை மக்களுக்கு புதிய காப்பீடு திட்டம் துவக்கப்படுகிறது. இதற்கான செலவுத் தொகையை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும்.
தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 55.67 இலட்சம் தகுதியான குடும்பங்களுக்கு, குடும்பத் தலைவரின் இயற்கை மரணத்திற்கு 2 இலட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். மேலும், குடும்பத் தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 இலட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகையும், நிரந்தர இயலாமைக்கு 2 இலட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும் : கனிமொழி எம்பி வலியுறுத்தல்
திங்கள் 1, மார்ச் 2021 4:22:17 PM (IST)

நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களும் மார்ச் 7ல் ஒரே மேடையில் அறிமுகம்: சீமான் அறிக்கை
திங்கள் 1, மார்ச் 2021 4:07:33 PM (IST)

மோடிக்கு அடிபணிந்து இருக்கும் எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய முடியாது: ராகுல்
திங்கள் 1, மார்ச் 2021 3:22:50 PM (IST)

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மூன்றே மாதங்களில் ரூ.225 உயர்வு: வைகோ கண்டனம்
திங்கள் 1, மார்ச் 2021 3:18:06 PM (IST)

பகவதியம்மன் கோயில் திருவிழா: குமரி மாவட்டத்திற்கு 9ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
திங்கள் 1, மார்ச் 2021 12:17:02 PM (IST)

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிப்பு - பொதுமக்கள் கடும் பாதிப்பு
திங்கள் 1, மார்ச் 2021 11:58:59 AM (IST)
