» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: போக்சோ சட்டத்தில் கைதானவர் சிறையில் தற்கொலை!!
செவ்வாய் 23, பிப்ரவரி 2021 4:17:07 PM (IST)
சேலத்தில் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி மத்திய சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். சேலத்தில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இவர், 17 வயது பள்ளி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் போலீசார் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.
சேலம் அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அசோக்குமார் மீது விசாரணை நடந்தது. விசாரணைக்கு பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 8 மாதங்களாக இவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அசோக்குமார் ஜாமீன் கேட்டு நீதி மன்றத்தின் மனு செய்திருக்கிறார். ஆனால் ஜாமீன் கிடைக்காத நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் சிறையிலேயே அசோக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஜாமீன் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அசோக்குமாரின் சடலத்தை மீட்ட சிறைத்துறை காவலர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மத்திய சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்தும் அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும் : கனிமொழி எம்பி வலியுறுத்தல்
திங்கள் 1, மார்ச் 2021 4:22:17 PM (IST)

நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களும் மார்ச் 7ல் ஒரே மேடையில் அறிமுகம்: சீமான் அறிக்கை
திங்கள் 1, மார்ச் 2021 4:07:33 PM (IST)

மோடிக்கு அடிபணிந்து இருக்கும் எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய முடியாது: ராகுல்
திங்கள் 1, மார்ச் 2021 3:22:50 PM (IST)

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மூன்றே மாதங்களில் ரூ.225 உயர்வு: வைகோ கண்டனம்
திங்கள் 1, மார்ச் 2021 3:18:06 PM (IST)

பகவதியம்மன் கோயில் திருவிழா: குமரி மாவட்டத்திற்கு 9ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
திங்கள் 1, மார்ச் 2021 12:17:02 PM (IST)

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிப்பு - பொதுமக்கள் கடும் பாதிப்பு
திங்கள் 1, மார்ச் 2021 11:58:59 AM (IST)
