» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

சனி 15, மே 2021 10:49:27 AM (IST)



சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள கரோனா கட்டளை மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 

சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கரோனா கட்டளை மையத்தில் திடீர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெண்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன், படுக்கை வசதிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் கரோனா கட்டளை மையத்தின் மூலம் துரிதமாக நடைபெறுகின்றன. 

இந்நிலையில் அங்கு கரோனா பேரிடர் காலப் பணிகள் நடைபெறுவது குறித்து மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் அங்கு பணிபுரிந்த அதிகாரிகளிடமும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து உரையாடினார். ஆய்வின் போது முதல்வரின் செயலாளர்கள் உதயசந்திரன், உமாநாத், தாரேஸ் அகமது ஆகியோர் உடன் இருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory