» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஆளுநர் பன்வாரிலால் ரூ.1 கோடி வழங்கினார்

சனி 15, மே 2021 8:34:03 PM (IST)



தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ரூ.1 கோடி வழங்கியுள்ளார். 

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது நிவாரணம் மற்றும் நோய் தடுப்புப் பணிகள் குறித்து ஆளுநரிடம் அவர் விளக்கியதாக கூறப்படுகிறது. முதல்வருடன் அமைச்சர் துரைமுருகன், தலைமைச்செயலர் இறையன்பு ஆகியோரும் சென்றிருந்தனர். 

இந்நிலையில் கரோனா நிவாரணமாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார். ரூ.1 கோடி நிதிக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் ஆளுநர் வழங்கினார். மேலும் தனது ஒரு மாத ஊதியத்தையும் கரோனா நிதியாக அவர் வழங்கினார். அதிகரித்து வரும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory