» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சுவாமித்தோப்பு தலைமைப்பதி பால லோகாதிபதியின் மகன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

திங்கள் 14, ஜூன் 2021 5:09:46 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமித்தோப்பு தலைமைப்பதி பால லோகாதிபதியின்  மகன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அய்யா வைகுண்டரின் சுவாமித்தோப்பு தலைமைப்பதி நிர்வாகிகளில் ஒருவரான பால லோகாதிபதி அவர்களின் மகன் பால பிரசாந்த் உடல்நலக் குறைவால் காலமானார். பால பிரசாந்த் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி விவரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அய்யா வைகுண்டரின் சுவாமித்தோப்பு தலைமைப்பதி நிர்வாகிகளில் ஒருவரான பால லோகாதிபதி அவர்களின் மகன் திரு. பால பிரசாந்த் அவர்கள், இளம் வயதிலேயே உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரிதும் வருந்தினேன்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அய்யா வைகுண்டரின் பக்தர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory