» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சனி 16, அக்டோபர் 2021 11:18:11 AM (IST)



ஐபிஎல் 14-ஆவது சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பா் கிங்ஸ் அணிக்கு முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 14-ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை கோப்பை வெல்வது இது 4-ஆவது முறையாகும். இதற்கு முன் 2010, 2011, 2018 ஆகிய ஆண்டுகளில் சென்னை சாம்பியனாகியுள்ளது. கடந்த சீசனில் மிக மோசமான வகையில் தோற்ற நிலையில், அதிலிருந்து மீண்டு தற்போது சாம்பியனாகி சாதித்திருக்கிறது சென்னை. 

இந்த நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பா் கிங்ஸ் அணிக்கு முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் தனது ட்விட்டர் பதிவில், சிஎஸ்கே அற்புதமாக செயல்பட்டது. மன்னர்கள் மீண்டும் கர்ஜித்தனர். நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஒவ்வொரு சிஎஸ்கே வீரர் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றியை கொண்டாட சென்னை அன்புடன் காத்திருக்கிறது மகேந்திர சிங் தோனி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

THE TRUTHOct 16, 2021 - 11:38:55 AM | Posted IP 108.1*****

CRICKET IS BUSINESS, TRUE PLAYERS ARE NOT A CHENNAI PLAYERS, THEY ARE NORTH INDIANS, POLITICIAN IS USELESS.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory