» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காரில் அதிமுக கொடியுடன் மெரினா கடற்கரைக்கு வந்த சசிகலா: ஜெ. நினைவிடத்தில் அஞ்சலி!!

சனி 16, அக்டோபர் 2021 3:32:36 PM (IST)



மெரினா கடற்கரையில் உள்ள ஜெயல‌லிதா, எம்.ஜி.ஆர்., அண்ணா நினைவிடங்களில் ச‌சிகலா மரியாதை செலுத்தினார்.

கரோனா பரவல் கட்டுக்குள் அடங்கியதும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திப்பேன் என்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு அங்கிருந்து எனது அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வேன் என்றும் சசிகலா தெரிவித்து வந்தார்.இந்த நிலையில் இன்று மெரினா கடற்கரையில் உள்ள ஜெயல‌லிதா, எம்.ஜி.ஆர்., அண்ணா நினைவிடங்களில் ச‌சிகலா மரியாதை செலுத்தினார்.

சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்து  மெரினா கடற்கரைக்கு புறப்பட்ட சசிகலாவுக்கு ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். ஆதரவாளர்கள் புடை சூழ சசிகலா எம்.ஜி.ஆர்., அண்ணா, ஜெயல‌லிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். ஜெயலலிதா நினைவிடத்தில் கண் கலங்கிய நிலையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஜெயலலிதா பயன்படுத்திய வாகனத்தில் அதிமுக கொடியுடன் மெரினா கடற்கரைக்கு சசிகலா வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory