» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
வெள்ளி 3, டிசம்பர் 2021 5:31:39 PM (IST)
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வருகிற 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி "அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்குத் தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று தனி நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதிமுகவை கேட்காமல் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது, அதேநேரத்தில் தேர்தலில் சட்ட விதிமீறல் இருந்தால் தேர்தலை நீதிமன்றம் ரத்து செய்யும் என்று நீதிபதி தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.
RAJUDec 4, 2021 - 02:51:11 PM | Posted IP 162.1*****