» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரயிலைக் கொளுத்தும் இளைஞர்கள் எப்படி நாட்டை காப்பாற்றுவார்கள்?” இயக்குநர் பேரரசு பேச்சு
வியாழன் 23, ஜூன் 2022 3:52:38 PM (IST)
ரயிலைக் கொளுத்தும் இளைஞர்கள் ராணுவத்திற்கு சென்று எப்படி நாட்டை காப்பாற்றுவார்கள்? என அக்னி பாத் திட்டம் குறித்து இயக்குநர் பேரரசு கருத்து தெரிவித்துள்ளார்.

ரயிலை கொளுத்துகிறார்கள் என்றால், இந்த தைரியம் இளைஞர்களுக்கு எப்படி வந்தது? இந்த இளைஞர்கள் ராணுவத்திற்கு சென்று எப்படி நாட்டை காப்பாற்றுவார்கள்? ஆகவே தேச விரோதிகளை இத்திட்டம் அடையாளம் காட்டிவிட்டது. பொதுச்சொத்தை நாசம் செய்பவர்கள் தேசத்துரோகிதான். வன்முறை தூண்டிவிடப்படுகிறது. இந்தியாவுக்கு நல்லது நடந்துவிடக்கூடாது என நினைக்கிறார்கள்.
பல்வேறு நல்ல திட்டங்கள் மூலம் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. தேசத்தை வலிமை மிக்க நாடாக மாற்றும் நோக்கில் அக்னி பாதை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சமூக விரோதிகள் எதிர்ப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியாவை வளர்ச்சி அடைய விடாமல் தடுப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் எவ்வித மத பேதமும் இல்லாமல் அனைவரும் பங்கேற்கலாம் என்று தெரிவித்திருப்பது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக கருத்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பாரத மாதாவின் புகைப்படத்தை பதிவேற்றினாலும் விமர்சனம் செய்கிறார்கள். உண்மையான உணர்வுள்ள இந்தியன் இந்த நாட்டை காக்க இந்த திட்டத்தில் சேர்ந்து வென்று காட்ட வேண்டும். இதை எதிர்ப்பவர்கள் இந்தியர்களாக இருக்க மாட்டார்கள்'' என்று அவர் கூறினார்.
மக்கள் கருத்து
unmaiJun 24, 2022 - 06:19:45 AM | Posted IP 162.1*****
Sangi talking. brain washed and no brain to think.
truthJun 24, 2022 - 06:17:08 AM | Posted IP 162.1*****
Politicians are burning the country and its people.
மேலும் தொடரும் செய்திகள்

மின் நிலைய அதிகாரி கொலை வழக்கில் 2 பேர் கைது : பரபரப்பு வாக்குமூலம்!
ஞாயிறு 26, ஜூன் 2022 12:24:08 PM (IST)

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி சர்வமத பிரார்த்தனை
ஞாயிறு 26, ஜூன் 2022 12:07:10 PM (IST)

உயர்கல்விக்கு வழிகாட்டும் "கல்லூரி கனவு" நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சனி 25, ஜூன் 2022 12:44:25 PM (IST)

தமிழகத்தில் நடப்பது தமிழர்களுக்கான ஆட்சியா? சிங்களர்களுக்கான ஆட்சியா? – சீமான் கண்டனம்
சனி 25, ஜூன் 2022 12:33:15 PM (IST)

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராமேஸ்வரம் வருகை : அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை!
சனி 25, ஜூன் 2022 11:24:56 AM (IST)

நாகர்கோவில் மாநகராட்சியில் பழைய முறைப்படியே வரி விதிக்கப்படும்: மேயர் அறிவிப்பு
சனி 25, ஜூன் 2022 10:45:24 AM (IST)

kumarJun 24, 2022 - 11:09:04 AM | Posted IP 162.1*****