» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் கடல்நீர் சாகச விளையாட்டுகள்: சுற்றுலா இயக்குநர் சந்தீப்நந்தூரி ஆய்வு!

வெள்ளி 24, ஜூன் 2022 3:53:19 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் கடல்நீர் சாகச விளையாட்டுகள் செயல்படுத்துவதற்கான இடங்களை தமிழ்நாடு சுற்றுலா இயக்குநர் சந்தீப் நந்தூரி, ஆய்வு மேற்கொண்டார்

சுற்றுலா துறை, கலை பண்பாடு மற்றும் இந்து அறநிலையத்துறை இயக்குநர் சந்திரமோகன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்து முள்ளக்காடு புதிய துறைமுக கடற்கரை பகுதி மற்றும் வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக பூங்கா கடற்கரைப் பகுதியில் கடல் நீர் சாகச விளையாட்டு மைதானங்கள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். 

அதனடிப்படையில் இன்று தமிழ்நாடு சுற்றுலா இயக்குநர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரவணன், ஆகியோர்கள் முன்னிலையில் முள்ளக்காடு புதிய துறைமுக கடற்கரை பகுதி மற்றும் வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக பூங்கா கடற்கரைப் பகுதியில் கடல் நீர் சாகச விளையாட்டு செயல்படுத்துவதற்கான இடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வில் மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மதுரை மண்டல மேலாளர் டேவிட் பிரபாகர், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory