» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேவாலயத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் பாதிரியார் கைது!

செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 5:12:52 PM (IST)

கிறிஸ்தவ தேவாலத்திற்கு வந்த 3 சிறுமிகள் மற்றும் ஒரு இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்தவர் ஜான் ராபர்ட் (45). இவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான தோணித்துறை, வலையர்வாடி, மரவெட்டிவலசை ஆகிய பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். இவர் தேவாலயங்களுக்கு வரும் 3 சிறுமிகள் மற்றும் ஒரு இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள், குழந்தைகள் நல அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் குழந்அதைகள் நல அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தேவாலயங்களுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் புகார் கொடுத்த சிறுமிகளிடம் ரகசிய விசாரணை நடத்தினர். அதில் பாதிரியார் ஜான் ராபர்ட் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளானது குறித்து மண்டபம் போலீஸ் நிலையத்தில் குழந்தைகள் நல அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பாதிரியார் ஜான் ராபர்ட் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். தேவாலயங்களுக்கு வழிபாட்டுக்கு வந்த சிறுமிகளுக்கு பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மண்டபம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

dgdfgdfgAug 9, 2022 - 09:40:33 PM | Posted IP 162.1*****

sex oru bothai

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory