» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கொலை முயற்சி வழக்கு: தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜர்!
புதன் 10, ஆகஸ்ட் 2022 12:12:54 PM (IST)

கொலை முயற்சி வழக்கு தொடர்பாக தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜரானார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் திமுக நகர செயலாளர் சுரேஷ் கொலை முயற்சி வழக்கில் 4வது குற்றவாளியாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சேர்க்கப்பட்டு கைதாகி பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். தூத்துக்குடி நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று (ஆக.10ம் தேதி) இறுதி விசாரணைக்காக சம்பந்தப்பட்ட அனைவரும் ஆஜாராகும்படி தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி இன்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்திற்கு வந்து, முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி முன்னிலையில் ஆஜரானார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் என்பவரும் நீதிபதி முன்னிலையில் ஆஜரானார். இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் 77-வது குடியரசு தினவிழா: ஆட்சியர் அழகுமீனா தேசியக்கொடி ஏற்றினார்!
திங்கள் 26, ஜனவரி 2026 12:43:43 PM (IST)

விஜய் ஜீரோ மாதிரி; ஜீரோ தனியாக இருந்தால் மதிப்பில்லை: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
திங்கள் 26, ஜனவரி 2026 12:34:35 PM (IST)

சென்னையில் குடியரசு தின விழா கோலாகலம்: ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றினார்
திங்கள் 26, ஜனவரி 2026 11:24:23 AM (IST)

2026 தேர்தல் தமிழக மக்களுக்கு மாற்றத்தையும், வெற்றியையும் கொடுக்கும்: பிரேமலதாவிஜயகாந்த்
ஞாயிறு 25, ஜனவரி 2026 2:12:30 PM (IST)

தீய சக்தி திமுக, ஊழல் சக்தி அதிமுக இனி தமிழ்நாட்டை ஆளவே கூடாது : விஜய் பேச்சு
ஞாயிறு 25, ஜனவரி 2026 2:07:46 PM (IST)

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் விரைவில் முழுமையாக அமல்: தமிழக அரசு
சனி 24, ஜனவரி 2026 5:49:07 PM (IST)

