» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தொழில் அதிபர் வீட்டில் 150 பவுன் நகை, ரூ. 5½ லட்சம் ரொக்கம் கொள்ளை: 3 பேர் கைது
வியாழன் 30, மார்ச் 2023 3:27:50 PM (IST)
காஞ்சிபுரம் தொழிலதிபர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கில் சென்னையை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம், பச்சையப்பன் மகளிர் கல்லூரி அருகே உள்ள கண்ணப்பன் தெருவில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி. தொழில் அதிபர். இவர் ரங்கசாமி குளம் பகுதியில் சிமெண்ட், கம்பி, டைல்ஸ், பெயிண்ட், உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 13-ந்தேதி சுந்தரமூர்த்தி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றார்.
அவர் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 150 பவுன் நகை, மற்றும் ரூ. 5½ லட்சம் ரொக்கம், 5 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போய் இருந்தது. மர்ம கும்பல் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு நகை-பணத்தை அள்ளி சென்று இருந்தனர். இதுகுறித்து விஷ்ணுகாஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை தொடர்பாக காஞ்சிபுரத்தை சேர்ந்த குணசேகரன், சென்னையை சேர்ந்த ராஜன், சிவவிநாயகம் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
கொள்ளையடித்த நகைகளை அவர்கள், திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே திருப்பணமூரில் சாலையோரம் உள்ள கிணற்றில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பேசில் பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் தேடினர். அப்போது ஒரு பையில் 62 பவுன் நகையை மீட்டனர். மேலும் கைதான 3 பேரிடமும் மீதி நகை மற்றும் ரொக்கப்பணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலத்தில் 97.39 சதவீதம் தேர்ச்சி!
செவ்வாய் 13, மே 2025 12:28:32 PM (IST)

பொது சுகாதாரதுறை திட்ட கட்டிட பணிகள்: குமரி மாவட்டத்திற்கு ரூ.10.25 கோடி நிதி ஒதுக்கீடு!
செவ்வாய் 13, மே 2025 12:02:15 PM (IST)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள்: நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 13, மே 2025 11:03:28 AM (IST)

தமிழகத்தில் காவல் துறையின் அணுகுமுறை மிக மோசம்: சிபிஎம் நிர்வாகி உ.வாசுகி பேட்டி!
செவ்வாய் 13, மே 2025 10:48:07 AM (IST)

லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 12, மே 2025 5:33:36 PM (IST)

தமிழகத்தில் மே 14, 15ல் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
திங்கள் 12, மே 2025 4:57:09 PM (IST)

நாயேMar 30, 2023 - 06:47:19 PM | Posted IP 162.1*****