» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தேசிய அளவில் தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற மாணவிக்கு ஆட்சியர் வாழ்த்து
வியாழன் 30, மார்ச் 2023 8:16:51 PM (IST)

தேசிய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தூத்துக்குடி மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த ராகவானந்தம் - ரா.மாலதி தம்பதியரின் மகள் பிரித்தி பிச்சம்மாள் என்பவர் தூத்துக்குடி வ.உ.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை வணிகவியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற 25ஆவது தேசிய அளவிலான காதுகேளாதோர் மற்றும் வாய்பேசமுடியாதோருக்கான தடகளப் போட்டிகளில் குண்டு எறிதல் போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் பரிசு வென்றுள்ளார்.
இந்நிலையில், தான் வென்ற வெண்கலப் பதக்கம் மற்றும் சான்றிதழை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் இதுபோன்று இன்னும் பல பதக்கங்களைப் பெற்று வெற்றிபெற வேண்டும் என மாணவியை வாழ்த்தினார். இந்நிகழ்வின்போது, சார் ஆட்சியர் கௌரவ் குமார் துணை ஆட்சியர் (பயிற்சி) பிரபு , மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.அந்தோணி அதிர்ஷ்டராஜ், மாவட்ட தடகள கழகச் செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட தடகள கழகப் பொருளாளர்/பயிற்சியாளர் அருள்சகாயம், மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் மெய்கண்டன், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 2026ல் மக்கள் திமுகவை ஏற்கப்போவது இல்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
புதன் 14, மே 2025 5:47:38 PM (IST)

அதிமுக ஆட்சியில் பாலியல் குற்றவாளிகளை பாதுகாத்து வந்தனர் : கனிமொழி எம்பி குற்றச்சாட்டு
செவ்வாய் 13, மே 2025 5:34:53 PM (IST)

யார் வெட்கித் தலைகுனிய வேண்டும்? முதல்வர் மீது இபிஎஸ் விமர்சனம்!
செவ்வாய் 13, மே 2025 4:34:17 PM (IST)

பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு நீதிக்குக் கிடைத்த வெற்றி: பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு
செவ்வாய் 13, மே 2025 4:04:08 PM (IST)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை!
செவ்வாய் 13, மே 2025 3:58:04 PM (IST)

பாஜக சார்பில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பேரணி : நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
செவ்வாய் 13, மே 2025 12:41:47 PM (IST)

P.S. RajMar 30, 2023 - 10:20:22 PM | Posted IP 162.1*****