» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
செப்டம்பர் - அக்டோபரில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படலாம்: பிரிஜேஷ் பட்டேல் தகவல்
வெள்ளி 12, ஜூன் 2020 5:25:06 PM (IST)
செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படலாம் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்தது. இதனிடையே ஐக்கிய அரபு அமீரகம் பிசிசிஐ-க்கு போட்டிகளை நடத்தக் கோரிக்கை விடுத்தது. இது குறித்து நேற்றுமுன்தினம் பேட்டியளித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ‘‘ஐபிஎல் போட்டிகளை இந்தாண்டு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றும் ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டித் தொடரை நடத்தலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது’’ எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் கூறுகையில் ‘‘செப்டம்பர் - அக்டோபர் மாதம் ஐபிஎல் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். ஆனால் அது ஐசிசியின் முடிவில்தான் இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் உலக கோப்பை டி20 தொடரை ஐசிசி நடத்தவில்லை என்றால். அந்தத் தேதிகளை ஐபிஎல் போட்டிகளுக்காகப் பயன்படுத்திக்கொள்வோம். எனவே ஐசிசியின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். அதன்பின்புதான் அடுத்தகட்டம் குறித்து யோசிக்க முடியும்’’ என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிஎஸ்கே அணியில் 35 வயது ராபின் உத்தப்பா: ரசிகர்கள் அதிருப்தி!
வெள்ளி 22, ஜனவரி 2021 4:38:01 PM (IST)

சென்னையில் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
வெள்ளி 22, ஜனவரி 2021 3:47:12 PM (IST)

தமிழக வீரர் நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு : மக்கள் வெள்ளம் திரண்டது
வெள்ளி 22, ஜனவரி 2021 10:26:39 AM (IST)

தோனியுடன் என்னை ஒப்பிடாதீர்: ரிஷாப் பண்ட்
வெள்ளி 22, ஜனவரி 2021 10:25:16 AM (IST)

மலிங்காவை விடுவித்தது ஏன்? மும்பை இந்தியன்ஸ் விளக்கம்
வியாழன் 21, ஜனவரி 2021 12:08:44 PM (IST)

ஜாதவ், ஹர்பஜன் உள்பட 6 பேரை விடுவித்தது சிஎஸ்கே!
வியாழன் 21, ஜனவரி 2021 10:59:51 AM (IST)
