» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தேசிய கீதம் ஒலித்தபோது அழுதது ஏன்?: சிராஜ் உருக்கம்
வியாழன் 7, ஜனவரி 2021 5:49:15 PM (IST)

சிட்னியில் 3-வது டெஸ்ட் தொடங்கும் முன்பு தேசிய கீதம் ஒலித்தபோது தான் அழுததற்கான காரணத்தை இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் இந்திய அணி மேற்கொண்டுள்ளது. இன்று 3-வது டெஸ்ட் சிட்னியில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் டிம் பெயின், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதல் நாளன்று ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்துள்ளது. டெஸ்ட் ஆட்டம் தொடங்கும் முன்பு இரு அணிகளின் தேசிய கீதமும் ஒலிக்கப்பட்டது.
அப்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் கண்ணீர் விட்டார். அவரால் அழுகையை அடக்க முடியாமல் போனது. இதனால் உருக்கமான ரசிகர்கள், சிராஜுக்கு ஆதரவாகச் சமூக வலைத் தளங்களில் பதிவுகள் எழுதியுள்ளார்கள். இந்நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிந்த பிறகு சிராஜ் கூறியதாவது: தேசிய கீதம் ஒலித்தபோது எனது தந்தையை நினைத்துக் கொண்டேன். நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று அவர் எப்போதும் ஆசைப்படுவார். இன்று அவர் இருந்திருந்தால் நான் விளையாடுவதைப் பார்த்திருப்பார் என்றார்.
26 வயது சிராஜ் இந்திய அணிக்காக ஒரு ஒருநாள் ஆட்டத்திலும் 3 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் கோலி தலைமையிலான ஆர்சிபி அணிக்கு விளையாடி வருகிறார். சிராஜின் தந்தை முகமது கோஸ் (53), நுரையீரல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நவம்பர் மாதம் மரணமடைந்தார். அப்போது இந்திய அணியினருடன் ஆஸ்திரேலியாவில் இருந்த சிராஜ், கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்ட காரணத்தால் இந்தியாவுக்குத் திரும்ப முடியாமல் போனது. இதனால் தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை.
Mohammed Siraj on why he got so emotional while the National Anthem was being played at the SCG.#TeamIndia#AUSvINDpic.twitter.com/zo0Wc8h14A
— BCCI (@BCCI) January 7, 2021
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: அஸ்வின், ரோகித் சர்மா முன்னேற்றம்
திங்கள் 1, மார்ச் 2021 12:05:28 PM (IST)

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் மீது விமா்சனம் எழுவது ஏன்? நாதன் லயன் கேள்வி
திங்கள் 1, மார்ச் 2021 11:10:57 AM (IST)

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு: யூசுப் பதான் அறிவிப்பு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:42:37 PM (IST)

இங்கிலாந்திற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அவார வெற்றி!
வியாழன் 25, பிப்ரவரி 2021 8:48:43 PM (IST)

அக்ஷர் பட்டேல் 6 விக்கெட் : 112 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து அணி
வியாழன் 25, பிப்ரவரி 2021 8:47:16 AM (IST)

ஐ.பி.எல். ஏலத்தில் கிறிஸ் மோரிஸ் புதிய சாதனை: ரூ.16¼ கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் அணி
வெள்ளி 19, பிப்ரவரி 2021 10:43:31 AM (IST)
