» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
நடராஜனுக்கு கரோனா உறுதி: ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு
புதன் 22, செப்டம்பர் 2021 5:12:49 PM (IST)

ஐதராபாத் அணியின் நடராஜனுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பாதிப்பால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. இன்று ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோத உள்ளன. இந்நிலையில், ஐதராபாத் அணியின் நடராஜனுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த 6 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனால், இன்றைய ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த சூழலில், இன்றைய ஐபிஎல் போட்டி திட்டமிட்ட படி நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஐதராபாத் அணியின் எஞ்சிய வீரர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு இல்லை எனவும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐசிசி டி20 தரவரிசை: வருண் சக்கரவர்த்தி முதலிடம்!
புதன் 17, செப்டம்பர் 2025 5:18:52 PM (IST)

மேட்ச் ரெஃப்ரீயை நீக்க முடியாது: பாக். கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி
புதன் 17, செப்டம்பர் 2025 10:58:42 AM (IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 4’ சுற்றுக்கு இந்திய அணி தகுதி!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:41:37 PM (IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:33:53 AM (IST)

பிசிசிஐ தலைவராக நியமனம்? சச்சின் மறுப்பு!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 11:40:15 AM (IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட்: எமிரேட்ஸ் அணியை பந்தாடிய இந்தியா!
வியாழன் 11, செப்டம்பர் 2025 10:50:35 AM (IST)
