» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

புரோ கபடி லீக்: பாட்னாவை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது டெல்லி அணி

சனி 26, பிப்ரவரி 2022 10:17:33 AM (IST)


புரோ கபடி லீக் போட்டியில் பாட்னாவை வீழ்த்தி டெல்லி அணி முதல் முறையாக கோப்பையை வென்றது. 

எட்டாவது புரோ கபடி லீக் பெங்களூருவில் நடைபெற்றறது. அரை இறுதி போட்டிகளில் பாட்னா பைரேட்ஸ் உ.பி. யோத்தாவையும் , தபாங் டெல்லி, பெங்களூரு புல்சையும் வெளியேற்றி இறுதிப் போட்டியை எட்டின. பிரசாந்த் குமார் ராய் தலைமையிலான பாட்னா அணி 4-வது முறையாகவும், ஜோகிந்தர் நர்வால் தலைமையிலான டெல்லி அணி தொடர்ந்து 2-வது முறையாகவும் இறுதி சுற்றுக்குள் நுழைந்தன. 

வெற்றிக் கோப்பைக்கான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில், டெல்லி-பாட்னா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடி, மாறி மாறி புள்ளிகளை பெற்றதால் போட்டி கடைசிவரை விறுவிறுப்பாக இருந்தது. இறுதியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் அதாவது 37-36 என்ற புள்ளிக் கணக்கில் டெல்லி அணி வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. 

கடைசி நேரத்தில் செய்த தவறால் பாட்னா அணி கோப்பையை இழக்க நேரிட்டது. இந்த சீசனில் 24 போட்டிகளில் 304 ரெய்டு பாயிண்டுகள் பெற்ற பவன் ஷெராவத், சிறந்த ரெய்டராக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் 24 போட்டிகளில் 89 புள்ளிகளைப் பெற்ற முகமதுரேசா ஷாத்லூயி, சிறந்த தடுப்பாட்ட வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல் புதிய இளம் வீரராக மோகித் கோயத்தும், இந்த சீசனில் மிகவும் மதிப்பு மிக்க வீராக நவீன் குமாரும் (17 போட்டிகளில் 207 ரெயிடு பாயிண்டுகள்) தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory