» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 498 ரன்கள் குவிப்பு: இங்கிலாந்து உலக சாதனை!
சனி 18, ஜூன் 2022 12:08:09 PM (IST)

நெதா்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 498 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.
நெதா்லாந்தில் நடைபெற்ற இந்த முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதா்லாந்து பௌலிங்கை தோ்வு செய்தது. இங்கிலாந்து பேட்டிங்கில் ஃபில் சால்ட் 14 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 122, டேவிட் மலான் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 125 ரன்கள் விளாச, ஜோஸ் பட்லா் 7 பவுண்டரிகள், 14 சிக்ஸா்களுடன் 162 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். உடன் லியம் லிவிங்ஸ்டன் 66 ரன்களுடன் துணை நிற்க, ஜேசன் ராய் 1, கேப்டன் மோா்கன் 0 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.
சா்வதேச ஒருநாள் கிரிக்கெட்டின் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்டுள்ள அதிகபட்ச ஸ்கோா் இதுவாகும். இதற்கு முன் இதே இங்கிலாந்து அணி 2018 ஜூன் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 50 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது தனது அந்த சாதனையை இங்கிலாந்தே 4 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடித்திருக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தோல்விக்கு நானே காரணம் - சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உருக்கம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:28:56 AM (IST)

சிஎஸ்கே தொடர் தோல்வி: தலைமை மாறுமா? ருதுராஜ் - பிளெமிங் மீது ரசிகர்கள் அருப்தி!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:59:36 PM (IST)

சாம்சனை இப்போதே எடை போடாதீர்கள்! - சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் ஆதரவு
சனி 4, ஏப்ரல் 2026 11:13:13 AM (IST)

அபிஷேக் சர்மாவுக்கு அபராதம்: ஐபிஎல் ஒழுங்கு நடவடிக்கை ஏன்?
வெள்ளி 3, ஏப்ரல் 2026 12:23:08 PM (IST)

வருண் சக்கரவர்த்தியின் மிஸ்டரி முடிவுக்கு வந்ததா? விமர்சனங்களுக்கு கே.கே.ஆர் பயிற்சியாளர் பதிலடி!
வியாழன் 2, ஏப்ரல் 2026 5:00:44 PM (IST)

தோல்வியால் விரக்தி: மைதானத்திலேயே ரிஷப் பண்டை கடிந்து கொண்ட சஞ்சீவ் கோயங்கா!
வியாழன் 2, ஏப்ரல் 2026 11:08:34 AM (IST)

