» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மின்னோளி கபடி போட்டி: தூத்துக்குடி அணி வெற்றி!!
செவ்வாய் 28, மார்ச் 2023 11:17:01 AM (IST)
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, நாசரேத், மணிநகரில், காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் நடைபெற்ற மாபெரும் மின்னோளி கபடி போட்டியில் முதல் பரிசை தட்டிச் சென்ற தூத்துக்குடி கள்ளன்பரம்பூர் அணியினர்.
அமரர் கராத்தே செல்வின் நாடார் நினைவு மின்னொளி கபாடி போட்டி கடந்த மார்ச் 25, 26 ஆகிய தினங்களில் காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் அதன் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஐஜினஸ் அவர்கள் தலைமையில், மணிநகர் 3ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 58 அணிகள் பங்கேற்று இரவு பகலாக ஆட்டம் நடைபெற்றது.
இதில், மார்ச் 26 இல் நடைபெற்ற நேற்றைய இறுதிப் போட்டியில் தூத்துக்குடி கள்ளன்பரம்பூர் மற்றும் மணிநகர் அணியினரும் மோதிய ஆட்டத்தில் தூத்துக்குடி அணி முதல் பரிசை வென்று வெற்றி கோப்பையை தட்டி சென்றது.இரண்டாவது இடத்தில் 3ஸ்டார் கிளப் மணிநகர் அணியும் மூன்றாவது இடத்தில் M.K பிரதர்ஸ் அரசாங்கநகர் அணியும் வெற்றி பெற்றனர்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக நாசரேத் காவல் துறை துணை ஆய்வாளர் ராய்ஸ்ட்டன், நாசரேத் தி.மு.க நகர செயலாளர் ஜமீன் சாலமோன், நாசரேத் பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி, நகர தி.மு.க துணை செயலாளர் ஜேம்ஸ், முன்னாள் தி.மு.க நகர செயலாளர் ரவி செல்வகுமார், தி.மு.க பிரமுகர் சாமுவேல், வணிக சங்க தலைவர் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.