» சினிமா » செய்திகள்

படப்பிடிப்பு புகைப்படங்கள் லீக் - பொன்னியின் செல்வன் படக்குழு அதிர்ச்சி

புதன் 28, ஜூலை 2021 5:06:17 PM (IST)

பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். முதல் பாகம் அடுத்தாண்டு வெளியிடப்பட உள்ளது. 

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை ’பொன்னியின் செல்வன்’ புகைப்படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், புதுச்சேரியில் நடைபெற்றுவரும் படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படங்கள் லீக்காகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கடலுக்கு அருகே கப்பல், போர் கேடயங்கள், குடில்கள் போன்று செட்டிங் அமைக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இது படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory