» சினிமா » செய்திகள்

தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200கோடி மோசடி பிரபல தமிழ் நடிகை கைது

செவ்வாய் 7, செப்டம்பர் 2021 3:32:20 PM (IST)

பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்ட நடிகை லீனா மரியா பால்  என்பவர்  காதலருடன் கைது செய்யப்பட்டார்.

மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஷிவிந்தர் மோகன் சிங் என்பவரது மனைவி அதிதி மும்பை திட்டமிட்ட குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரில், தனது கணவருக்கு பிணை வாங்கித் தருவதாகக் கூறி கும்பல் ஒன்று தன்னிடம் ரூ. 200 கோடி மோசடி செய்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து காவல்துறையின் விசாரணையில் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. 

சுகேஷ் பல்வேறு குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த வழக்கில் சுகேஷிற்கு உதவியாக செயல்பட்டு வந்த அவரது காதலரும் நடிகையுமான லீனா மரியா பால் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட கம்லேஷ் கோத்தாரி, சாமுவேல், அருண் உள்ளிட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அவர்களை நீதிமன்றக் காவலில் எடுத்து, இந்த வழக்கு குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லீனா மரியா பால் தமிழில் பிரியாணி, மெட்ராஸ் கஃபே ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory