» சினிமா » செய்திகள்
மாநாடு படக்குழுவினருக்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு
செவ்வாய் 7, டிசம்பர் 2021 11:43:08 AM (IST)
தமிழ் சினிமாவுக்கு புதிய மற்றும் பொழுதுபோக்கான ஒரு அனுபவம் என ‘மாநாடு’ படத்திற்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவிருந்து பின்னர் நவ.25ஆம் தேதி வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் சிம்பு, வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ‘மாநாடு’ படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ‘மாநாடு’ படத்தை மிகவும் புத்திசாலித்தனமான முறையில் எழுதி இயக்கியுள்ளார் வெங்கட் பிரபு. சிம்பலரசன் கலக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா அற்புதமாக நடித்துள்ளார். யுவனின் இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது. அனைத்து நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். டைம் லூப் கதைக்களம் அருமையாக கைகொடுத்துள்ளது. தமிழ் சினிமாவுக்கு புதிய மற்றும் பொழுதுபோக்கான ஒரு அனுபவம். இவ்வாறு ஷங்கர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெங்களூரு சம்பவம்: நடிகர் சித்தார்த் வருத்தம்!
சனி 30, செப்டம்பர் 2023 11:04:37 AM (IST)

லியோ இசை வெளியீட்டு விழா ரத்து: தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம்!
புதன் 27, செப்டம்பர் 2023 12:14:52 PM (IST)

நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 4:31:07 PM (IST)

பாலாவின் வணங்கான் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் : தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 12:22:06 PM (IST)

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்..!
திங்கள் 25, செப்டம்பர் 2023 3:41:58 PM (IST)

எங்கள் காவிரி எங்கள் உரிமை; கன்னட நடிகர்கள் குரல்!
சனி 23, செப்டம்பர் 2023 5:51:52 PM (IST)
