» சினிமா » செய்திகள்
மாநாடு படக்குழுவினருக்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு
செவ்வாய் 7, டிசம்பர் 2021 11:43:08 AM (IST)
தமிழ் சினிமாவுக்கு புதிய மற்றும் பொழுதுபோக்கான ஒரு அனுபவம் என ‘மாநாடு’ படத்திற்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவிருந்து பின்னர் நவ.25ஆம் தேதி வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் சிம்பு, வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ‘மாநாடு’ படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ‘மாநாடு’ படத்தை மிகவும் புத்திசாலித்தனமான முறையில் எழுதி இயக்கியுள்ளார் வெங்கட் பிரபு. சிம்பலரசன் கலக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா அற்புதமாக நடித்துள்ளார். யுவனின் இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது. அனைத்து நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். டைம் லூப் கதைக்களம் அருமையாக கைகொடுத்துள்ளது. தமிழ் சினிமாவுக்கு புதிய மற்றும் பொழுதுபோக்கான ஒரு அனுபவம். இவ்வாறு ஷங்கர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்
வியாழன் 17, ஜூலை 2025 4:30:39 PM (IST)

படம் ரிலீசான முதல் 3 நாட்கள் பப்ளிக் ரிவியூ எடுக்க தடை: நடிகர் விஷால் வலியுறுத்தல்
வியாழன் 17, ஜூலை 2025 12:16:41 PM (IST)

படப்பிடிப்பு விபத்தில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழப்பு: சரத்குமார் இரங்கல்!
புதன் 16, ஜூலை 2025 12:11:43 PM (IST)

ரஜினியின் கூலி ட்ரெய்லர் ஆக.2-ல் வெளியாகும் : லோகேஷ் கனகராஜ் தகவல்
செவ்வாய் 15, ஜூலை 2025 5:33:58 PM (IST)

சூப்பர் குட் பிலிம்ஸ் - விஷால் படம்: பூஜையுடன் தொடக்கம்
திங்கள் 14, ஜூலை 2025 5:26:22 PM (IST)

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்
திங்கள் 14, ஜூலை 2025 11:17:58 AM (IST)
