» சினிமா » செய்திகள்

திரைப்பட இயக்குநர் - இசையமைப்பாளர் எஸ்.வி.ரமணன் காலமானார்

திங்கள் 26, செப்டம்பர் 2022 4:05:30 PM (IST)



திரைப்பட இயக்குநரும், இசையமைப்பாளருமான எஸ்.வி.ரமணன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 87,

நாடகக் கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கிய ரமணன், பல்வேறு மேடை நாடகங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.எண்ணற்ற வானொலி விளம்பரங்களுக்கு குரல் கொடுத்துள்ளார். மேலும், தூர்தர்ஷனுக்காக பல்வேறு சீரியல்களையும், பல ஆவணப்படங்களையும் இவர் எடுத்துள்ளார். எஸ்.வி.ரமணனுக்கு திருமணமாகி லஷ்மி, சரஸ்வதி என இரு மகள்கள் உள்ளனர். இதில் லஷ்மியின் மகன் இசையமைப்பாளர் அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1983-ம் ஆண்டு ஒய்.ஜி.மகேந்திரன், சுஹாசினி நடிப்பில் வெளியான ‘உருவங்கள் மாறலாம்’ என்ற திரைப்படத்தை இயக்கி, இசையமைத்திருந்தார் எஸ்.வி.ரமணன். இப்பத்தில் கௌரவத் தோற்றத்தில் சிவாஜி கணேசன், ரஜினி, கமல்ஹாசன், ஜெய்சங்கர் ஆகியோர் நடித்திருந்தனர். தெலுங்கில் ‘துரை பாபு ஷோபனம்’ என்ற படத்தையும் இவர் இயக்கினார், அது வெளியாகவில்லை. 1966-ல் ஜெயகாந்தன் இயக்கத்தில் வெளியான ‘யாருக்காக அழுதான்’ படத்துக்கு இசையமைத்திருந்தார்.

இந்நிலையில், தனது குடும்பத்தினருடன் ஆர்.ஏ.புரத்தில் வசித்து வந்த ரமணன் வயது மூப்பு காரணமாக இன்று காலை அவரது வீட்டில் காலமானார். அவரது இறுதி சடங்கு இன்று மாலை நடைபெற இருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory