» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மதுரை - தூத்துக்குடி சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை நீக்கம் : உச்சநீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 10, ஜூன் 2025 8:31:40 AM (IST)
மதுரை - தூத்துக்குடி இடையிலான சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, ‘மாதம் ரூ.11 கோடி வசூலிக்கும் நிலையில் சாலை பராமரிப்புக்கு ரூ.30 லட்சம் மட்டுமே செலவு செய்வதாக தொடர்ந்த வழக்கில், மதுரை - தூத்துக்குடி இடையே 2 சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க அதிரடியாக கடந்த 3-ந்தேதி தடை விதித்தது.
இந்த தடை உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, மன்மோகன் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வெங்கட்ராமன், பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
பாலகிருஷ்ணன் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, அனைத்து அம்சங்களையும் உயர்நீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளது. உரிய பராமரிப்பு இல்லாமல் சுங்கக்கட்டணம் வசூலிப்பது பகல் கொள்ளை என வாதிட்டார். இருதரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் மதுரை-தூத்துக்குடி இடையிலான சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க விதித்த உயர்நீதிமன்றம் தடையை நிறுத்தி வைத்தது. மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க பாலகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்வினைக் கொண்டாடுவோம் சிறப்பு பயிலரங்கம் : நடிகர் தாமு பங்கேற்பு
வெள்ளி 20, ஜூன் 2025 8:47:57 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆலோசனை!
வெள்ளி 20, ஜூன் 2025 5:45:04 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:28:41 PM (IST)

நெல்சாகுபடிக்கு சிறப்புத் தொகுப்புத் திட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 20, ஜூன் 2025 3:55:50 PM (IST)

அரசு பஸ்சின் அச்சு முறிந்து சாலையில் ஓடிய சக்கரங்கள்: 3 மாணவர்கள் படுகாயம்!!
வெள்ளி 20, ஜூன் 2025 3:25:32 PM (IST)

வெளிநாட்டில் வேலை தருவதாக ரூ.10.87 லட்சம் மோசடி வழக்கில் பெண் கைது!
வெள்ளி 20, ஜூன் 2025 8:53:23 AM (IST)

SeenivasagamJun 10, 2025 - 03:09:49 PM | Posted IP 172.7*****