» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி மாவட்டத்தில் 7ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 4, ஜூலை 2025 3:45:26 PM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவினை முன்னிட்டு வருகிற 7ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா 07.07.2025 அன்று திங்கட்கிழமை நடைபெற உள்ளதால். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி. கல்லூரிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும், 07.07.2025 அன்று அரசு தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட மாணவ / மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கும் இவ்விடுப்பு பொருந்தாது எனதெரிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறைக்குப் பதிலாக 19.07.2025 அன்று மூன்றாம் சனிக்கிழமை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெள்ள பாதிப்புகளைத் தடுக்கப் போர்க்கால நடவடிக்கை : ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு!
சனி 16, மே 2026 11:07:43 AM (IST)

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக இபிஎஸ் ஆதரவாளர்கள் நூதன போராட்டம்!
வெள்ளி 15, மே 2026 11:27:59 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)

நெல்லையில் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் - கொத்தனார் கைது!
செவ்வாய் 12, மே 2026 8:42:37 AM (IST)

விஜய் முதல்வராவதில் இழுபறி நீடிப்பால் விரக்தி: தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சனி 9, மே 2026 3:10:10 PM (IST)

கோடை மழையால் குற்றாலம் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
சனி 9, மே 2026 9:00:15 AM (IST)



PraneeshJul 4, 2025 - 08:54:13 PM | Posted IP 172.7*****