» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வ.உ.சி. துறைமுகத்தில் காற்றாலை, சோலார் மூலம் 32½ லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி!
சனி 5, ஜூலை 2025 8:47:32 AM (IST)
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் சூரிய மின்நிலையம், காற்றாலை மூலம் 32½ லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் சுத்தமான மற்றும் பசுமை துறைமுகமாக மாற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதன்படி வ.உ.சி. துறைமுகத்தில் 5 மெகாவாட் தரையில் பொருத்தப்பட்ட சூரிய மின்நிலையம், 2 மெகாவாட் காற்றாலை மின்நிலையம், 1.04 மெகாவாட் மேற்கூரை சூரிய மின்நிலையம் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் துறைமுகத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் வ.உ.சி துறைமுகம் 35 லட்சத்து 62 ஆயிரத்து 839 யூனிட் மின்சாரத்தை சூரிய மின் ஆலை மற்றும் காற்றாலை மூலம் உற்பத்தி செய்து உள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 27 லட்சத்து 36 ஆயிரத்து 229 யூனிட்டுன் ஒப்பிடும் போது, 30 சதவீதம் அதிகம் ஆகும். இது வ.உ.சி. துறைமுகத்தின் நிலைத்தன்மை மற்றும் சுத்தமான எரிசக்தி ஆதாரங்களை ஏற்றுக்கொள்வதற்கான உறுபாட்டை பிரதிபலிக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவக்க விழா: சபாநாயகர் மு.அப்பாவு பங்கேற்பு
செவ்வாய் 15, ஜூலை 2025 12:51:08 PM (IST)

எல்.ஐ.சி. ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
திங்கள் 14, ஜூலை 2025 8:46:24 AM (IST)

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை: 4 குழந்தைகள் பரிதவிப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 10:59:59 AM (IST)

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
சனி 12, ஜூலை 2025 4:17:07 PM (IST)

ஆசிரியைகள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!
சனி 12, ஜூலை 2025 3:38:39 PM (IST)

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)

முட்டாள்Jul 5, 2025 - 12:43:48 PM | Posted IP 162.1*****