» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காவல்துறை சார்பில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை திருடி விற்க முயன்ற 3 பேர் கைது!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 8:37:51 PM (IST)
நெல்லை அருகே காவல்துறை சார்பில் பொருத்தப்பட்டிருந்த 3 சி.சி.டி.வி. காமிராக்களை திருடி விற்க முயன்ற 3பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை கண்காணிக்கும் வகையில் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் பாப்பாக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காசி தர்மம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்கள் சேதமடைந்திருந்தன. மேலும் அங்கிருந்த ஒரு காமிரா காணாமல் போயிருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மற்ற சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் 3 பேர் குடிபோதையில் காமிராக்களை சேதப்படுத்திய காட்சிகள் பதிவாகி இருந்தது.
இந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சி.சி.டி.வி. காமிராக்களை சேதப்படுத்தியது காசி தர்மம் பகுதியை சேர்ந்த சின்னத்துரை (19), இசக்கி செல்வம் (20) சுடலைக்கனி(26) என தெரிய வந்தது. மேலும் அவர்கள் சி.சி.டி.வி. காமிராக்களை திருடி விற்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து பாப்பாக்குடி போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!
புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்
புதன் 17, செப்டம்பர் 2025 10:31:00 AM (IST)

கோவிலில் வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 8:33:36 AM (IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)
