» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தனியார் நிதி நிறுவனத்தில் போலி ரசீது தயாரித்து ரூ.13 லட்சம் மோசடி : ஊழியர் கைது
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 8:40:51 PM (IST)
நெல்லை டவுனில் தனியார் நிதி நிறுவனத்தில் போலி ரசீது தயாரித்து ரூ.13 லட்சம் மோசடி செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லையை சேர்ந்தவர் செல்வ ஜெபஸ்தியான்(43). இவர் நெல்லை டவுன் எஸ்.என். ஹைரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் கிளை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். அதே கிளையில் குழு தலைவராக சேரன்மகாதேவி அருகே உள்ள கூனியூரை சேர்ந்த அருண்குமார் (30) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் அருண்குமார் தினமும் தனக்கு கீழ் பணிபுரியும் களப் பணியாளர்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்து ஒப்படைக்கும் பணத்தை வாங்கி அதனை நிதி நிறுவனத்தின் வங்கி கணக்கில செலுத்தி அதற்கான ரசீதை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார்.
ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கடந்த மாதம் வரையிலும் வசூல் செய்த பணத்தை அருண்குமார் தனது நிறுவனத்தின் வங்கி கிளையில் செலுத்தாமலேயே போலியாக ரசீது ஏற்பாடு செய்து பணத்தை செலுத்தி விட்டதாக மோசடி செய்துவிட்டதாக கிளை மேலாளரான செல்வ ஜெபஸ்தியான் தனது ஆய்வில் கண்டுபிடித்தார்.
மேலும் இவ்வாறாக கடந்த 4 மாதங்களில் நிறுவனத்தின் பணம் ரூ.13 லட்சம் வரை அவர் மோசடி செய்தது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக செல்வ ஜெபஸ்தியான் சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோலப்பன் விசாரணை நடத்தி பண மோசடியில் ஈடுபட்ட அருண்குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!
புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்
புதன் 17, செப்டம்பர் 2025 10:31:00 AM (IST)

கோவிலில் வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 8:33:36 AM (IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)
