» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது : அரிவாள் பறிமுதல்!
திங்கள் 29, செப்டம்பர் 2025 4:00:32 PM (IST)
தூத்துக்குடியில் அரிவாளைக் காட்டி, பணம் கேட்டு மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி பெருமாள் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி என்ற மாக்கான் (45) இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் இருந்து வருகிறது. இந்நிலையில், இவர் எப்.சி.குடோன் ரவுண்டானா அருகே உள்ள டீக்கடை முன்பாக கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நின்று கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர. அப்போது, அந்த வழியாக வந்த கூலித் தொழிலாளி செந்தில் (44) என்பவரை வழிமறித்து, அவரது மோட்டார் சைக்கிளை அடித்து சேதப்படுத்தி பணம் கேட்டு அரிவாளைக் காட்டி மிரட்டிக் கொண்டிருத்த அந்தோணி என்ற மாக்கானை தென்பாகம் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல்துறையில் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கம்? ஷியாம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!
செவ்வாய் 10, மார்ச் 2026 3:14:37 PM (IST)

நெல்லை - மங்களூரு புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
செவ்வாய் 10, மார்ச் 2026 7:59:23 AM (IST)

தேர்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றிட வேண்டும்: மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தல்
சனி 7, மார்ச் 2026 3:44:13 PM (IST)

திருநெல்வேலி- மங்களுர் புதிய வாராந்திர ரயில் அறிவிப்பு: கன்னியாகுமரி பயணிகள் ஏமாற்றம்!
சனி 7, மார்ச் 2026 11:34:43 AM (IST)

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி முறையீடு
வெள்ளி 6, மார்ச் 2026 5:32:10 PM (IST)

கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? பெ.இராஜேஷ் செல்வரதி நூல் வெளியீட்டு விழா
வெள்ளி 6, மார்ச் 2026 8:03:06 AM (IST)


inbaOct 1, 2025 - 10:45:22 PM | Posted IP 162.1*****