» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
எம்பவர் சங்கருக்கு சிறந்த சேவைக்கான விருது
புதன் 8, அக்டோபர் 2025 12:17:46 PM (IST)

சென்னையில் நடைபெற்ற விழாவில் நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் எம்பவர் சங்கருக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.
சென்னையில் சிஏஜி நுகர்வோர் அமைப்பின் 40 வது ஆண்டு விழா நடைபெற்றது. இதற்கு சிஏஜி அறங்காவலர் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு தலைமை தாங்கினார். சிஏஜி செயல் இயக்குநர் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற நீதிபதி சிவ சுப்பிரமணியன், இந்து பத்திரிக்கை குழும இயக்குநர் முரளி, தமிழ்நாடு அரசு அலுவலர் கிரீஸ், மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் சிஏஜியின் பணிகளில் சிறப்பாக ஒத்துழைத்துமைக்காகவும், நுகர்வோர் செயல்பாட்டாளராக சிறப்பாக செயல்பட்டு வருவதற்கும் நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினரும், எம்பவர் இந்தியா கௌரவ செயலாளர் சங்கருக்கு சிறந்த சேவைக்கான விருதை ஓய்வு பெற்ற தமிழக அரசின் செலாளர் பணீந்திர ரெட்டி வழங்கினார்.
தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினராக தற்போது பதவி வகிக்கின்றார். இவர் தூத்துக்குடி மாவட்ட சிறப்பு இளஞ்சிறார் காவல் பிரிவு உறுப்பினராகவும், எம்பவர் இந்தியா கௌரவ செயலாளராகவும், சர்வதேச அளவில் நுரையீரல் நோய் பவுண்டேஷனின் தலைவராகவும், தேசிய அளவில் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவராகவும், இந்திய நுகர்வோர் உரிமை அமைப்பின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகின்றார். தமிழ்நாடு மூத்த குடி மக்கள் நல இயக்கத்தின் நிறுவனராகவும் உள்ளார். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு ஆலோசனைக் குழுக்களில் இடம் பெற்றுள்ளார். கடந்த 42 வருடங்களாக சமூக செயல்பாட்டாளராக உள்ளார்.
இவர் ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் பொறுப்புத் தலைவராகவும் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையின் வட்டார தளபதியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். ஐக்கிய நாட்டு சபையில் நடைபெற்ற கூட்டங்களில் இந்திய அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொண்டுள்ளார்.
மேலும் சமூக சேவை தொடர்பாக இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின், ஆஸ்டிரியா, ஸ்லோவோகியா, தென் ஆப்ரிக்கா, மலேசியா, இலங்கை, தாய்லாந்து, கென்யா, சிங்கப்பூர், வியட்நாம், துபாய், அபுதாபி, தோகா, ஷார்ஜா மற்றும் நேபாள் ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில் பங்கேற்றுள்ளார்.
நுகர்வோர் ஊற்று, நுகர்வோரே உங்களுக்காக, நுகர்வோர் கையேடு, சுற்றுச்சூழல் கையேடு மற்றும் தாய்ப்பாலே சிறந்தது ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவர் மாநில அளவில் தமிழக அரசின் நுகர்வோர் பாதுகாப்பு விருதையும் பெற்றுள்ளார். மேலும் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகத்தால் பல பாராட்டு சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். ரோட்டரி சங்கம் உட்பட பல அமைப்புகள் இவரை பாராட்டி கௌரவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் பணிக்காக ஓடிபி வராது: வாக்காளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!
புதன் 19, நவம்பர் 2025 8:15:43 AM (IST)

வீடு புகுந்து தம்பதியை மிரட்டி நகை-பணம் கொள்ளை : மர்மநபர்கள் கைவரிசை!!
புதன் 19, நவம்பர் 2025 8:12:19 AM (IST)

ஒப்பந்ததாரரிடம் உதவி கலெக்டராக நடித்து நகை, பணம் மோசடி : மேலும் ஒருவர் கைது!!
புதன் 19, நவம்பர் 2025 8:09:58 AM (IST)

தென்காசி மாவட்டத்தில் கனமழை : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:45:56 PM (IST)

வட்டாச்சியர் அலுவலகங்களில் எஸ்ஐஆர் உதவி மையங்கள் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:17:25 AM (IST)

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!
திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)





கே.கணேசன்.Oct 11, 2025 - 07:34:41 AM | Posted IP 172.7*****