» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)
தச்சநல்லூர் காவல் நிலையம் உள்பட 4 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை தச்சநல்லூர் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜவல்லிபுரத்தை சேர்ந்த அருண்குமார் (35) உள்பட 2 பேரை கைது செய்தனர். இதனை அறிந்த அருண்குமாரின் தம்பியான அஜித்குமார் (30) தனது கூட்டாளிகளுடன் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்று, தச்சநல்லூர் காவல் நிலையம் உள்பட 4 இடங்களில் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரண் என்பவரை கைது செய்தனர். அதேபோல் தாழையூத்து போலீசார், அஜித்குமார், அவரது கூட்டாளி பெருமாள் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக அஜித்குமாரின் கூட்டாளிகளான ராஜவல்லிபுரத்தை சேர்ந்த கிருஷ்ணபெருமாள் (19), வல்லவன்கோட்டையை சேர்ந்த அருண் (22) ஆகியோரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். அவர்கள் 2 பேரையும் தச்சநல்லூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைதானவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘‘போலீசாரை அச்சுறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டுகளை வீசினோம்’’ என்று கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் பணிக்காக ஓடிபி வராது: வாக்காளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!
புதன் 19, நவம்பர் 2025 8:15:43 AM (IST)

வீடு புகுந்து தம்பதியை மிரட்டி நகை-பணம் கொள்ளை : மர்மநபர்கள் கைவரிசை!!
புதன் 19, நவம்பர் 2025 8:12:19 AM (IST)

ஒப்பந்ததாரரிடம் உதவி கலெக்டராக நடித்து நகை, பணம் மோசடி : மேலும் ஒருவர் கைது!!
புதன் 19, நவம்பர் 2025 8:09:58 AM (IST)

தென்காசி மாவட்டத்தில் கனமழை : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:45:56 PM (IST)

வட்டாச்சியர் அலுவலகங்களில் எஸ்ஐஆர் உதவி மையங்கள் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:17:25 AM (IST)

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!
திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)




