» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் ரயில் மீது ஏறி ரீல்ஸ் எடுத்த கல்லூரி மாணவர் பரிதாப சாவு : 2 பேர் காயம்
ஞாயிறு 2, நவம்பர் 2025 9:13:45 PM (IST)

தூத்துக்குடியில் சரக்கு ரயில் மீது ஏறி ரீல்ஸ் எடுத்த கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். மேலும்2 பேர் தீக்காயம் அடைந்தனர்.
தூத்துக்குடி அண்ணா நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் நீதியரசன் மகன் அருண் (18), இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் விலங்கியல் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர்கள் ராஜகோபால் நகர் 4வது தெருவை சேர்ந்த சசிகுமார் மகன் கவின் 14, சண்முக சேகர் மகன் ஹரிஷ் 17 ஆகிய 3பேரும் இன்று மாலை 5.30 மணி அளவில் மீளவிட்டான் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் வண்டியின் காட் வேனில் ஏறி ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது மேலே சென்ற மின்சார வயரில் கைப்பட்டதில் மின்சாரம் தாக்கி அருண்குமார் தூக்கி வீசப்பட்டு பலத்த தீக்காயம் அடைந்தார். மேலும் கவின், ஹரிஷ் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக 3 பேரையும் வேன் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அருண்குமாரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் 2பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
S சந்திரசேகரன்Nov 3, 2025 - 06:37:25 AM | Posted IP 104.2*****
படித்த இளைஞர்கள் இவவிதம் பாதுகாப்பு உணர்வின்றி செயல்படுவது வேதனை.
BalaNov 2, 2025 - 10:54:05 PM | Posted IP 104.2*****
yala savu savula..
DareNov 2, 2025 - 10:39:28 PM | Posted IP 162.1*****
ரொம்ப நல்லது
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் பணிக்காக ஓடிபி வராது: வாக்காளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!
புதன் 19, நவம்பர் 2025 8:15:43 AM (IST)

வீடு புகுந்து தம்பதியை மிரட்டி நகை-பணம் கொள்ளை : மர்மநபர்கள் கைவரிசை!!
புதன் 19, நவம்பர் 2025 8:12:19 AM (IST)

ஒப்பந்ததாரரிடம் உதவி கலெக்டராக நடித்து நகை, பணம் மோசடி : மேலும் ஒருவர் கைது!!
புதன் 19, நவம்பர் 2025 8:09:58 AM (IST)

தென்காசி மாவட்டத்தில் கனமழை : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:45:56 PM (IST)

வட்டாச்சியர் அலுவலகங்களில் எஸ்ஐஆர் உதவி மையங்கள் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:17:25 AM (IST)

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!
திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)





srinivasanNov 3, 2025 - 11:04:20 AM | Posted IP 172.7*****