» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் சாலைகள் மோசம்: அரசு அதிகாரிகள் காரில் செல்ல தடை விதிக்க கோரிக்கை!
திங்கள் 17, நவம்பர் 2025 3:30:31 PM (IST)
தூத்துக்குடியில் அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லாமல் இரு சக்கர வாகனங்களில் செல்ல வேண்டும் என்று நூதன கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜக உறுப்பினர் காசிலிங்கம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் சில மாதங்களுக்கு முன்பு தான் பல ரோடுகள் போடப்பட்டன. ஆனால் அனைத்தும் தரம் இல்லாமல் போடப்பட்டு பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் செல்லமுடியவில்லை.
மேலும், பல இடங்களில் பாதாள சாக்கடை மூடிகள் சரியாக அமைக்காததால் அதன் அருகில் ஆபத்தான குழிகள் ஏற்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொது மக்கள், இக்குழிகளினால் விபத்துக்குள்ளாகிறார்கள். அனைத்து அரசு அதிகாரிகளும் தரமில்லாத ரோட்டில் தான் நான்கு சக்கர வாகனத்தில் செல்வதால் அவர்களுக்கு பொது மக்கள்படும் அவதி தெரிவதில்லை.
ஆகையால், அனைத்து அரசு அதிகாரிகளும் இரு சக்கர வானத்தில் தான் அரசு அலுவலகத்திற்கு வரவேண்டும் என உத்திர விடவேண்டியும், இது மாதிரி மோசமான சாலையை முறையாக பராமரித்து பொது மக்களின் உயிரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா எரிபொருள் விநியோகம்
சனி 6, டிசம்பர் 2025 10:26:05 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை : ஆன்லைன் விளையாட்டால் சோகம்!!
சனி 6, டிசம்பர் 2025 8:37:08 AM (IST)

திருநெல்வேலி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்: மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் அழைப்பு
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:36:56 PM (IST)

நம்பியாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார் சபாநாயகர் அப்பாவு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:17:31 PM (IST)

நெல்லையில் வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளி கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:12:49 PM (IST)



BabuNov 18, 2025 - 07:54:33 AM | Posted IP 162.1*****