» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி பஸ் நிலையத்தில் போதை வாலிபர்கள் அட்டகாசம் - பொதுமக்கள் கடும் அவதி!
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:15:53 PM (IST)

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் போதை வாலிபர்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் புறக்காவல் நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அண்ணா பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு செயல்படும் கடைகள் ஒருபுறம் ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்கள் செல்ல முடியாத சூழ்நிலைதான் நிலவி வருகிறது. மறுபுறம் தினமும் மது போதையில் பேருந்து நிலையத்தில் அமர்ந்து கொண்டு பேருந்துக்கு செல்ல வரும் பொதுமக்கள் செல்வதற்கு மிகவும் சிரமப்படும் சூழ்நிலை தொடர்ந்து நிலவு வருகிறது.
இந்நிலையில் இன்று மது போதையில் 2பேர் பேருந்து நிலையத்தில் படுத்து கிடப்பதும், எழுந்து நடமாடி. சண்டை போட்டுக் கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். குறிப்பாக பெண்கள் அச்சம் அடைந்தனர். போதை ஆசாமிகளால் ஆட்டம் முடியும் வரை காவல்துறை பேருந்து நிலையத்துக்கு வரவே இல்லை. பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கும் பாதுகாவலரும் இதனை கண்டு கொள்ளவே இல்லை என்று கூறப்படுகிறது.
இது போல போதை ஆசாமிகளால் அண்ணா பேருந்து நிலையம் தினசரி பொதுமக்களுக்கு இடையூறு தான் ஏற்படுகிறது. ஆகையால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் இதற்கு உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும். மேலும் புறக்காவல் நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மக்கள்Nov 18, 2025 - 11:59:10 PM | Posted IP 162.1*****
அவுங்க போதை ஆசாமி அப்படினு சொல்லாதீங்க. அவுங்க நம்ம அரசோட கஜானா நிரப்ப கடினமாக உழைக்கும் இளைஞர்
மேலும் தொடரும் செய்திகள்

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா எரிபொருள் விநியோகம்
சனி 6, டிசம்பர் 2025 10:26:05 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை : ஆன்லைன் விளையாட்டால் சோகம்!!
சனி 6, டிசம்பர் 2025 8:37:08 AM (IST)

திருநெல்வேலி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்: மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் அழைப்பு
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:36:56 PM (IST)

நம்பியாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார் சபாநாயகர் அப்பாவு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:17:31 PM (IST)

நெல்லையில் வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளி கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:12:49 PM (IST)



aahaanNov 19, 2025 - 07:10:29 AM | Posted IP 104.2*****