» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சாலைகளில் திரிந்த 36 மாடுகள் கோசாலையில் அடைப்பு: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி!
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:43:43 PM (IST)

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக திரிந்த 36 மாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகரின் முக்கிய சாலைகள் மற்றும் போக்குவரத்து அதிகமுள்ள தெருக்களில் தற்போது கால்நடைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு, விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு கட்சியினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து தூத்துக்குடி மாநகர சாலைகளில் விபத்து ஏற்படுத்தும் விதமாக சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேயர் ஜெகன், ஆணையர் பிரியங்கா ஆகியோர் உத்தரவின்படி மாநகர் நல அலுவலர் சரோஜா மேற்பார்வையில் சுகாதார அலுவலர் ராஜபாண்டி தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் பணியாளர்கள் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை எட்டயபுரம் ரோடு, பாளையங்கோட்டை ரோடு, திருச்செந்தூர் ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் திரிந்த 36 மாடுகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த கால்நடைகளை மாநகராட்சிக்கு சொந்தமான கோ சாலையில் அடைக்கப்பட்டது. இதில் மாடுகளுக்கு 5000 ரூபாயும் கன்னுக்குட்டிகளுக்கு 2500 ரூபாயும் முதல் கட்டமாக மாநகராட்சிக்கு மாட்டின் உரிமையாளர் பணத்தை செலுத்தி மாடுகளை அழைத்துச் செல்ல வேண்டும். இரண்டாவது முறை அதே மாடு பிடிபட்டால் மாட்டுக்கு 10 ஆயிரம் ரூபாயும் கன்னுக்குட்டிக்கு 5000 ரூபாயும் மூன்றாவது முறை அதே மாடு பிடிபட்டால் மாடு மாநகராட்சிக்கு சொந்தம் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆகையால் இனி வரும் காலங்களில் சாலைகளில் மாடுகள் தெரிந்தால் மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோசாலையில் அடைக்கப்பட்டுள்ள மாடுகளை மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மாநகராட்சி, மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு மாடுகளுக்கு உரிய நேரத்தில் உணவு வகைகளை நேரத்துக்கு நேரம் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா எரிபொருள் விநியோகம்
சனி 6, டிசம்பர் 2025 10:26:05 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை : ஆன்லைன் விளையாட்டால் சோகம்!!
சனி 6, டிசம்பர் 2025 8:37:08 AM (IST)

திருநெல்வேலி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்: மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் அழைப்பு
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:36:56 PM (IST)

நம்பியாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார் சபாநாயகர் அப்பாவு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:17:31 PM (IST)

நெல்லையில் வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளி கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:12:49 PM (IST)



ஏரியா காரன்Nov 18, 2025 - 08:56:37 PM | Posted IP 172.7*****