» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : கள்ளக்காதலனுடன் தாய் கைது!

ஞாயிறு 24, மே 2026 8:46:25 PM (IST)

நெல்லையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கள்ளக்காதலனுடன் தாய் கைது செய்யப்பட்டார்.

நெல்லை பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (24), டிரைவர். இவருக்கும் பாளையங்கோட்டையில் ஒரு பகுதியை சேர்ந்த திருமணமான 42 வயது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பெண்ணுக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயதில் மகள் உள்ளார்.

மணிகண்டனுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையேயான பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்ற மணிகண்டன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உல்லாசம் அனுபவித்து வந்தார்.

இதுதவிர மாணவியின் கண்முன்னே அவர்கள் 2 பேரும் தனிமையில் இருந்துள்ளனர். மணிகண்டன் அடிக்கடி அந்த பெண்ணின் 14 வயது மகளை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்தார். தாய் கண் முன்னே மாணவிக்கு மணிகண்டன் பாலியல் தொல்ைல ெகாடுத்ததாக கூறப்படுகிறது. அதை மாணவியின் தாய் தட்டிக்கேட்கவில்லை.

இதுகுறித்து மாணவி பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியை மீட்டு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது மாணவி, தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை மற்றும் தாயின் கள்ளக்காதல் விவகாரம் ஆகியவை குறித்து போலீசாரிடம் கூறினார். இதுதொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து மாணவியின் தாய், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory