» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம்: பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 8:44:26 PM (IST)

பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எல்லைப் பகுதியில் காவல்துறையினரின் பாதுகாப்பு பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 68வது நினைவு தினம் இன்று (11.09.2025) அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் மாவட்ட எல்லை சோதனை சாவடிகள் உட்பட மாவட்டத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று சூரங்குடி மற்றும் கோடாங்கிபட்டி ஆகிய சோதனை சாவடிகளுக்கு நேரில் சென்றும், மாவட்டத்தின் முக்கிய இடங்களுக்கு ரோந்து மேற்கொண்டும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினரின் பணியை ஆய்வு செய்து காவல்துறையினருக்குஅறிவுரைகள் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தீபு உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500-ஆக குறைப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 4:55:58 PM (IST)

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி : 21 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!
புதன் 17, செப்டம்பர் 2025 4:51:32 PM (IST)

கள்ளச்சாராயம் விற்பது தான் திமுக-வின் இளைஞர் அணி கோட்பாடா? நயினார் நாகேந்திரன் கேள்வி
புதன் 17, செப்டம்பர் 2025 4:25:18 PM (IST)

தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
புதன் 17, செப்டம்பர் 2025 4:21:01 PM (IST)

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப கட்டுமான பணிகள் : ஆட்சியர் ஆய்வு
புதன் 17, செப்டம்பர் 2025 3:30:36 PM (IST)

குமரியிலிருந்து சென்னைக்கு இரண்டாவது தினசரி இரவு நேர ரயில் இயக்கப்படுமா? குமரி மக்கள் எதிர்பார்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 3:25:32 PM (IST)
