» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இ.பி.எஸ். எப்படி முதலமைச்சர் பதவியை பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும்: செங்கோட்டையன்
சனி 1, நவம்பர் 2025 12:34:15 PM (IST)
நான் தி.மு.க.வின் பி டீம் இல்லை. தி.மு.க.வின் ஏ டீமாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
அதிமுகவில்இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது "எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலராக பொறுப்பேற்ற பிறகு 2019, 2021, உள்ளாட்சி தேர்தல், 2024 தேர்தல் என தொடர்ந்து அதிமுக தோல்வியைச் சந்தித்து வருகிறது.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தோல்வியையே காணாதவர், ஜெயலலிதா ஒரு முறை தோற்றால் மறுமுறை வெற்றியைக் காண்பார். ஆனால், ஜெயலலிதா மறைந்து 4 ஆண்டுகள் ஆட்சி செய்த பழனிசாமி, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அதிமுகவுக்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றி வந்தேன். கட்சி உடைந்துவிடக் கூடாது என்றுதான், பத்து நாள்களுக்குள் பேச்சு தொடங்குங்கள் என்று வலியுறுத்தினேன்.
அப்போதே, கெடுவா என்று கேட்டீர்கள். இல்லை என்றேன். 10 நாள்களுக்குள் முடிவெடுங்கள். ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதம் எடுத்துக் கொள்ளலாம். யாரிடமாவது கருத்தும் கேளுங்கள். ஆனால், யாரைச் சேர்ப்பது என்பதை பொதுச் செயலாளர் முடிவு செய்துகொள்ளலாம் என்று வலியுறுத்தினேன்.
நான் விதித்தது கெடு அல்ல, பேசி முடிவெடுக்க வேண்டும் என்றுதான் என் கருத்தை முன் வைத்தேன். ஆனால் கெடு விதித்து விட்டார் என்றுதான் செய்திகள் வெளியாகின. இயக்கம் ஒன்று சேர வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் அதிமுக தொண்டர்களின் எண்ணத்தைப் புரிந்துகொண்டு என் கருத்தைச் சொன்னேன். நமது இயக்கத்தை வலிமையுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்தற்காக கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டது.
ஆனால், அதன் பிறகு எனது கட்சிப் பொறுப்புகள் நீக்கப்பட்டன. கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பைத் தவிர மற்றவற்றிலிருந்து நீக்கப்பட்டேன். அதிமுக புத்துயிர் பெற்று தமிழகத்தில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட வேண்டும். ஜெயலலிதா அவர்கள் தமிழகம் வலிமையோடு இருக்கும் என்று சொன்னார்களே அதனை நிறைவேற்றவே என எனது கருத்தை சொன்னேன். ஒருவேளை, 2026ல் வெற்றி வாய்ப்பை இழந்தால், ஏன் முன்பே சொல்லவில்லை என்ற கேள்வி எழும் என்பதால்தான் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறினேன்.
நான் தி.மு.க.வின் பி டீம் இல்லை. தி.மு.க.வின் ஏ டீமாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். இ.பி.எஸ். தற்போது வரை அ.தி.மு.க.வின் தற்காலிக பொதுச்செயலாளர் தான். ஆட்சியை காப்பாற்றிய பா.ஜ.க.விற்கு இ.பி.எஸ். துரோகம் செய்தவர். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியவர். பொதுச் செயலாளராக இருந்த இ.பி.எஸ். தான் கொடநாடு கொலை, கொள்ளை பற்றி பேச வேண்டும். இ.பி.எஸ். தான் ஏ1 ஆக இருக்கிறார். இ.பி.எஸ். எப்படி முதலமைச்சர் பதவியை பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராஜராஜ சோழன் சதய விழா: பெருவுடையார்- பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான அபிஷேகம்
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:40:47 AM (IST)

கோவில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி: பெற்றோர் வீட்டில் தனியாக விட்டுச்சென்றதால் பரிதாபம்!!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:37:50 AM (IST)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: 3 முறை நேரில் சென்று விசாரிக்க அறிவுறுத்தல்
சனி 1, நவம்பர் 2025 5:36:12 PM (IST)

கண்ணகி நகரில் ரூ.40 லட்சம் மதிப்பில் கபடி மைதானம்: துணை முதல்வர் உதயநிதி ஆய்வு!
சனி 1, நவம்பர் 2025 5:25:31 PM (IST)

தமிழகத்தில் ஆளுநர் ரவியை தவிர வேறு எந்த பிஹாரிக்கும் பிரச்சினை இல்லை: துரை வைகோ
சனி 1, நவம்பர் 2025 4:56:34 PM (IST)

விடுப்பட்ட பணிகளை செயல்படுத்துவதற்கு முழு நடவடிக்கை எடுப்போம்: ஆட்சியர் உறுதி!
சனி 1, நவம்பர் 2025 4:06:26 PM (IST)




